சூப்பராக நடந்து முடிந்தது ‘நாகினி’ சீரியல் புகழ் மௌனி ராயின் திருமணம் - அழகிய புகைப்படம் வைரல்
பாலிவுட் சினிமாவில் பாம்புக் கதையை மையமாக வைத்து ‘நாகினி’ தொடர் பிரபலமாக ஓடியது. இதனையடுத்து, இத்தொடர் தமிழ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
ஒளிபரப்பப்பட்ட சில நாட்களிலேயே தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ‘நாகினி’ தொடர். இத்தொடரில் பாம்பாக நடித்தவர் ‘மௌனி ராய்’. இவர் தமிழ் மக்களையும், எல்லா இளைஞர்களின் மனதையும் கொள்ளையடித்தார்.
தற்போது, இன்று இவருக்கு கோலாகலமாக மலையாள முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
மௌனி ராய், சுராஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். துபாய் தொழிலதிபரான சுராஜ், மௌனி ராயை முதன்முதலில் 2019ம் ஆண்டு நியூஇயர் அன்று தான் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இதோ இருவரின் திருமண கோல புகைப்படம் -