நடிகர் ஆர். வீரமணி மறைவிற்கு டப்பிங் யூனியன் இரங்கல்!
தமிழ் சினிமா நடிகரும், டப்பிங் யூனியனின் முன்னாள் தலைவருமான ஆர்.வீரமணி கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவிற்கு டப்பிங் யூனியன் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது -
ஆர்.வீரமணி பல வருடங்களாக டப்பிங் யூனியனில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்தவர். 2004-2006 வரை டப்பிங் யூனியனின் தலைவராகவும் இருந்தவர். அமரர் எம்.ஆர்.ராதாவின் நாடக கம்பெனியில் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரசியல் கட்சி தொடங்கியபோது தன்னை மும்முரமாக அதில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
பல டப்பிங் கலைஞர்களை அறிமுகம் செய்தவர். அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் வீரமணி. கொரோனா பாதிப்பினால் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தவர் இயற்கை எய்தினார் என்பதை அனைத்து டப்பிங் கலைஞர்கள் சார்பாகவும், டப்பிங் யூனியன் மற்றும அதன் தலைவர் ராதாரவி சார்பாகவும் மிக வருத்தத்தோடு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
