கணவர் அடித்து துன்புறுத்துவதாக பிரபல நடிகை போலீசில் புகார்!

Complaint Cinema
By Nandhini Apr 15, 2021 07:47 AM GMT
Report

பிரபல திரைப்பட நடிகை ராதா தன் கணவன் அடித்து சித்ரவதை செய்வதாக காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

சுந்தரா டிராவல்ஸ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா (39). இவர் அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சென்னை எழும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜ் என்பவரை கடந்த ஓன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார் நடிகை ராதா. இவர்கள் இருவரும் சாலிகிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கணவர் அடித்து துன்புறுத்துவதாக பிரபல நடிகை போலீசில் புகார்! | Cinema Complaint

இதனையடுத்து, நடிகை ராதா சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், எனது கணவர் வசந்த ராஜுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதமும், சண்டையும் வருகிறது. வாக்குவாதத்தில் என்னை வசந்தராஜ் அடித்து துன்புறுத்துவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர் அளித்த புகாரின் பேரில், வழக்கைப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை ராதா காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்துள்ளதால் சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.