பிக்பாஸ் வீட்ல ராஜூ அழுத ரெண்டே இடம் இதுதானாம்?
பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதும் காமெடி, கலாய்ப்பு, நக்கல், நைய்யாண்டி என கலகலப்பான பாணியில் நிறை குறைகளை சொல்லி வந்ததன் முலம் பலரது இதயத்தை வென்றவர் ராஜூ.
இப்படிப்பட்ட ராஜூ பிக்பாஸ் வீட்டில் 2 முறை தான் அழுதிருக்கிறார். இதற்கு முன்பு இமான் அண்ணாச்சியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார் ராஜூ.
அவர்களின் இருவரும் ஒத்த அலைவரிசை உடையவர்களாகவே பார்வையாளர்களுக்கும் தோன்றினார்கள். இதை நாமினேஷனின் போதும் இமான் அண்ணாச்சியும் ராஜூவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வகையில் இமான் அண்ணாச்சியின் வெளியேற்றத்தின்போது, பிக்பாஸ் வீட்டு தூணில் சாய்ந்துகொண்டு ராஜூ அழுததை யாராலும் மறக்க முடியாது. ராஜூவாலேயே மறக்க முடியாது.
ஏனென்றால் அநேகமாக ராஜூவே முதல் முதலாக அழுதது அந்த இடம்தான். ஃபினாலேவுக்கு முதல் நாள் ஒவ்வொரு போட்டியாளரையும் ஒரு புதிய செட்டுக்கு அழைத்து பேசிய பிக்பாஸ் அப்படி ராஜூவையும் அழைத்து கிட்டத்தட்ட 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ராஜூ வாழ்ந்த குறும்படத்தை போட்டுக் காட்டினார்.
அப்போது, அங்கு ஒளிபரப்பப்பட்ட நினைவலைகள் வீடியோ தொகுப்பை பார்த்து முடித்ததும் ராஜூ, கண்கலங்கி அழுதார்.
அதன் பின்பு, ராஜூவிடம் பேசிய பிக்பாஸ், “ராஜூ நீங்க யாருனு உலகுக்கு பரீச்சயப்படுத்தும் எண்ணத்தோட இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தீங்க, அதுக்கு அப்பிறம் குறைவா பேசி நிறைய உள்ளங்கள சம்பாதிச்சீங்க...
நாளடைவில் நகைச்சுவையின் நாயகனாக இந்த பிக்பாஸ் வீட்டையும் மக்களையும் கவர்ந்தீங்க.
பல நேரங்களில் கோபத்த கட்டுப்படுத்தி, சில நேரங்களில் அதுக்கு இரையாகி பின்னர் புரிந்துகொண்டு தடம் மாற்றி, தம்பிக்கு அண்ணனாக, அண்ணனுக்கு தம்பியாக, இந்த வீட்டின் எண்டர்டெயினராக இருந்து வருகிறீகள். நல்ல பாடி, நல்ல பிரெய்ன் இருக்கும் ராஜூ பாய் நீங்கள்!” என்று பேசி ராஜூவை உற்சாகப்படுத்தினார் பிக்பாஸ்.