எனக்கு சம்பளம் வேண்டாம் என்று பிக்பாஸ் 5 குழுவினரிடம் கூறிய போட்டியாளர் - யார் தெரியுமா?
சம்பளமே வேண்டாம்னு சொல்லி ஷாக் கொடுத்த போட்டியாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5 தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு அவர்கள் எவ்வளவு நாட்கள் அந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு சம்பளமும் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் பிக்பாஸ் 5-வது சீசனில் அதிகம் சம்பளம் வாங்கியது பிரியங்கா தான். இவருக்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக ராஜு மற்றும் இமான் அண்ணாச்சிக்கு தலா 40 ஆயிரமும், பாவனிக்கு ரூ.20 ஆயிரமும் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் இசைவாணி மற்றும் அக்ஷராவுக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரமும், தாமரை, சுருதி, நிரூப், அமீர், அபிஷேக், மதுமிதா ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஒருவர் மட்டும் தனக்கு எந்தவித சம்பளமும் வேண்டாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது வேறு யாரும் இல்லை வருண் தான்.
இவர் தனக்கு சம்பளமே வேண்டாம் என்று பிக்பாஸ் குழுவினரிடம் கூறியிருப்பதாகவும், அவரை வெறுங்கையுடன் அனுப்ப மனமில்லாத அக்குழுவினர், குறிப்பிட்ட அமவுண்டை கவுரவ தொகையாக கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகழ் வெளிச்சத்துக்காக தான் வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். அவர் நினைத்தபடியே அந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் நடிப்பில் தற்போது ஜோஷ்வா என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது.
கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.