பிக்பாஸில் சிபிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி - வெளியான ப்ரொமோ - ஆனந்தத்தில் போட்டியாளர்கள்
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 79வது நாளை எட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்ற நிலையில், இந்த வாரம் பிரியங்கா, வருண், நிரூப், அக்ஷரா, பாவனி ஆகியோர் உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், கண்பெஷன் ரூமிற்கு வருமாறு சிபியை பிக் பாஸ் அழைக்கிறார்.
ஏதோ கூற தான் கூப்பிடுவதாக நினைத்து கொண்டே சிபி செல்லும் நிலையில், அங்கு அவரது மனைவி இருக்கிறார். அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த சிபி, ஏ நீ பாம்பேவில் இருப்பதாக கூறினார்கள் என சொல்லிக்கொண்டே அவரை கட்டிக்கொள்கிறார்.
பின்னர் இருவரும் வெளியே வந்து சக ஹவுஸ் மேட்ஸிடம் பேசும் காட்சிகள் உள்ளது. இதனால் இந்த வாரம் முழுவதும் எமோஷனல், கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Day79 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/IbXsLtlCTq
— Vijay Television (@vijaytelevision) December 21, 2021