‘சிபி கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் பண்ற மாதி இருக்கு...’ - அக்ஷராவால் வெடித்தது பிரச்சினை
சிபி கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் பண்ற மாதி இருக்கு என அக்ஷரா கூறியுள்ளது 2வது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் விறுவிறுப்புடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது, வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட்ட் டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார். இதில் ‘கனா காணும் காலங்கள்’ என்னும் பள்ளிப்பருவ டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அக்ஷரா சுட்டித் தனம் என்றால் என்ன என்பதே தெரியாமல் விளையாடியதாக சிபி குறை கூறுகிறார்.
அப்போது, கடுப்பான அக்ஷரா, சிபி கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணியது போல தோன்றுகிறது என்று கூறினார். இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் முட்டிக்கொண்டது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ -