தூக்கில் தொங்கிய ரஜினிகாந்தின் ஆஸ்தான நடிகை - நெஞ்சை ரணமாக்கும் உண்மை சம்பவம்
தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகமானவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த வகையில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமாகி ரசிகர்களை மிகுந்த நடிகை என்றால் அது ஜெயலட்சுமி தான்.
குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக ஜெயலட்சுமி வலம் வந்தார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜெயலட்சுமி, தெலுங்கு சினிமாவின் மூலம் தான் முதல் முதலாக சினிமா திரையுலகில் அறிமுகமானார்.
அதன்பிறகு தமிழில் ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற திரைப்படத்தின் மூலம் கால்தடம் பதித்தார். அப்படத்தில் அடிக்கடி ‘படாபட்’ என்ற வசனம் மிகவும் பிரபலமடைந்தது.
நடிகை ஜெயலட்சுமி, முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, சிவகுமார் ஆகியோர் அனைவருடன் நடித்தார். அது மட்டுமின்றி சூப்பர் ஸ்டாருடன் ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘முள்ளும் மலரும்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்து விருது வாங்கியுள்ளார்.
இவர் நடிகர் சுகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் திருமணம் மிக விரைவிலேயே முடிந்துவிட்டது.
சுகுமார்க்கு ஏற்கெனவே திருமணம் ஆனது நடிகை ஜெயலட்சுமிக்கு திருமணத்துக்குப் பிறகு தான் தெரிய வந்தது. இதனையடுத்து, கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றார்.
இவ்வாறு தொடர்ந்து வந்த விஷயங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் ஜெயலட்சுமி. இந்த துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் 22 வயதில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இவரின் தற்கொலைச் சம்பவம் சினிமாத்துறையிலும், ரசிகர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.