இந்தப் பெருமை எல்லாம் என் பெற்றோருக்கே... - கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு நெகிழ்ச்சி பேச்சு!
கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிம்பு, விழா மேடையில் தனது பெற்றோர் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
கலைத்துறை நட்சத்திரங்களுக்கு முன்னணி பல்கலைக்கழகங்கள் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமான ஒன்று. இதன்படி நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் நேற்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
இந்த நிகழ்ச்சியில், சிம்புவுடன் அவருடைய தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
டாக்டர் பட்டம் வாங்கியதும் நடிகர் சிம்பு பேசுகையில், ‘இந்தப் பட்டம் எனக்கு உரித்தானது கிடையாது. எனது இந்த நிலைக்கு முழுக் காரணம் எனது தந்தையும் தாயும் தான். சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது அவர்களால் தான். 9 மாத குழந்தையிலிருந்து என்னை இப்பயணத்தில் இணைத்தது அவர்கள் தான். எனவே இந்தப் பெருமைகள் அனைத்தும் அவர்களையே சாரும்.
அவர்களைப் போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். சிம்பு தற்போது கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Thanking all the committee members of Vels University & @IshariKGanesh for bestowing the Honorary Doctorate upon me.
— Silambarasan TR (@SilambarasanTR_) January 11, 2022
I dedicate this huge honour to
Tamil cinema, my Appa & Amma! Cinema happened to me because of them!
Finally - my fans, #NeengailaamaNaanilla
Nandri Iraiva! ❤️ pic.twitter.com/YIc6WyGCvR