நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு - ரசிகர்கள் 3 பேர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கியது கிராமம்

cinema
By Nandhini Oct 30, 2021 06:14 AM GMT
Report

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் ரசிகர்கள் 3 பேர் உயிரிழந்தனர். அதில் 2 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்.

இதனால் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். புனித் ராஜ்குமார் உயிரிழப்புக்கு பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் மறைவை தாங்கிக்கொள்ள முடியாத அவரது ரசிகர் ராகுல் (21) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், புனித் ராஜ்குமார் மறைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் முனியப்பன், பரசுராம் ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்கா, மருரு கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் (30) மாரடைப்பால் மரணமடைந்தார்.

இது குறித்து, அந்த கிராம மக்கள் கூறுகையில், முனியப்பா நடிகர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர். மேலும், அவரது அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்து வந்தார். நேற்று, நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்ததை கேள்விபட்ட முனியப்பா அதிர்ச்சியடைந்தார். அவர் தொலைக்காட்சி முன் கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது, நெஞ்சுவலி என்று கூறி கீழே விழுந்தார். உடனடியாக முனியப்பாவை மருத்துவமனைக்கு செல்லப்பட்டபோது, அங்கு அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக கூறினர்.

அதேபோல, பெலகாவியில் உள்ள ஷிண்டோல்லி கிராமத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் மற்றொரு ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். புனித் ராஜ்குமார் உயிரிழந்த செய்தியை அறிந்து தொலைக்காட்சியின் முன்பு அழுது கொண்டிருந்தார்.

அப்போது கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11 மணியளவில் அவர் உயிரிழந்தார். மேலும், நடிகர் புனித் ராஜ்குமாரின் மற்றொரு ரசிகர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நேற்று இரவு நடிகர் புனித் ராஜ்குமார் படத்திற்கு தனது வீட்டில் மரியாதை செலுத்திய பின்னர் ராகுல் (21) என்ற ரசிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு - ரசிகர்கள் 3 பேர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கியது கிராமம் | Cinema