231 கி.மீட்டர் தூரம் நடந்தே சென்று நடிகர் ராம் சரணை சந்தித்த ரசிகர்கள் - புகைப்படம் வைரலானது!
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் நடிப்பில் தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தையடுத்து, சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ராம் சரணுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.
இந்நிலையில், தீவிர ரசிகர்களான சந்தியா ஜெயராஜ், ரவி, வீரேஷ் ஆகியோர் ராம் சரணை நேரில் சந்திக்க ரொம்ப நாளாக ஆசைப்பட்டனர். ஆனால், கொரோனா தொற்று காரணமான பேருந்துகள் அதிக அளவில் இயங்காததால் நடந்தே சென்று ராம் சரணை சந்திக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, தெலுங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்திலிருந்து ஐதராபாத் வரை, நான்கு நாட்களாக 231 கிலோ மீட்டர் தூரம் இவர்கள் 3 பேரும் நடந்தே சென்று ராம் சரணை சந்தித்திருக்கிறார்கள். நடிகர் ராம் சரணும், அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து கட்டி அணைத்து வரவேற்றுள்ளார்.
இந்த 3 பேரையும் பார்த்து நடிகர் ராம் சரண் நெகிழ்ந்து போனார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
