கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்!

cinema
By Nandhini May 12, 2021 09:39 PM GMT
Report

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி தடுப்பூசி தான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த சினிமா நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் தடுப்பு செலுத்திக் கொண்டு மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.

அந்த வகையில், அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன், நேற்று சென்னைக்கு நடிகர் ரஜினிகாந்த் திரும்பினார். இந்நிலையில், இன்று அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இது தொடர்பாக அவரது மகள் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நம்ம தலைவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போரை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.