பிரபல இயக்குநர் தயாளன் கொரோனாவால் உயிரிழந்தார்
cinema
By Nandhini
சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த பிரபல தமிழ்திரைப்பட இயக்குநர் எஸ்.தயாளன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவில், முரளி, தேவயானி, விந்தியா, வடிவேலு ஆகியோரை வைத்து கண்ணுக்கு கண்ணாக படத்தை இயக்கியவர் எஸ்.தயாளன். பங்கஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2000ம் ஆண்டு இப்படம் வெளியானது. தயாளன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்து வருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.