நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா உறுதி!
இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்த சூழ்நிலையில், ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தத் தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பிடியில் அதிகளவில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரபல நடிகையும் பாடகியான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடந்த வாரம் எனக்கு கொரோனா உறுதியானது. நண்பர்களும், குடும்பத்தினரும் என்னைக் கவனித்து வருகிறார்கள். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இது மிகவும் இக்கட்டான சூழல் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நடிகை தீபிகா படுகோன், மனிஷா யாதவ், அபிராமி அம்மு, பூஜா ஹெக்டே, சமீரா ரெட்டி உள்ளிட்ட பல நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.