மறைந்த நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட ‘பிக்பாஸ் புகழ்‘ பிரபல நடிகை

cinema
By Nandhini Apr 22, 2021 11:33 AM GMT
Report

உலக பூமி தினத்தை முன்னிட்டு, மறைந்த நடிகர் விவேக் நினைவாக திருவள்ளூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் 59 மரக்கன்றுகளை பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை ரம்யா பாண்டியன் நட்டார்.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர், இந்த 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

விழாவில் எஸ்பி அரவிந்தன் கூறுகையில், மாவட்ட காவல்துறை சார்பில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படும் என்றார்.

நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில், உலக பூமி தினத்தன்று, ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடுவது என்னுடைய வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நடிகர் விவேக் நினைவாக, அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் விதமாக 59 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்று பேசினார். 

மறைந்த நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட ‘பிக்பாஸ் புகழ்‘ பிரபல நடிகை | Cinema