3-வது குழந்தை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும் - கங்கனா ரனாவத்

cinema
By Nandhini Apr 21, 2021 11:47 AM GMT
Report

மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக கங்கனா ரனாவத் இப்படியொரு கருத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சலோனி கவுர் என்ற நகைச்சுவை நடிகை, கங்கனா ரனாவத்துக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர்,ஒரு சகோதரி என மூன்று பேர் என நக்கலாக பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்து கங்கனா ரனாவத் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "என்னுடைய தாத்தாவுடன் பிறந்தவர்கள் 8 பேர். அந்த காலத்தில் நிறைய குழந்தையை பெற்றுக் கொண்டார்கள். அதில் பலரும் இறந்தும் போவார்கள். அப்போது காட்டில் வசித்ததால் ஆபத்தும் அதிகம். ஆனால் நாம் அப்போது இருந்தது போல் இப்போது இருக்க முடியுமா? காலத்திற்கு ஏற்றார்போல நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும். அதற்கு சீனாவில் இருப்பது போல கடுமையான சட்டங்கள் தேவை" என கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார். 

3-வது குழந்தை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும் - கங்கனா ரனாவத் | Cinema