அவ்வுளவு சுலபமா ரஷ்யாவை நினைக்காதிங்க : உளவுத்துறை தகவலால் பதறும் அமெரிக்கா
ரஷ்யாவினால் உலக நாடுகளுக்கே பெரும் ஆபத்து உள்ளதாக சிஐஏ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் மோசமான விளைவுகளை சந்தித்துள்ளது உக்ரைன்.
ஆனால் இதுவரை உக்ரைன் முழுவதையும் ரஷ்யாவினால் கைபற்ற முடியவில்லை, உக்ரைன் நகரில் முகாமிட்டிருந்த ரஷ்ய ராணுவத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவருகின்றனர்.
இந்த போரில் உக்ரைன் பாதிக்கப்பட்டாலும் கடும் பின்னடைவினையே ரஷ்யா சந்தித்துள்ளது, அதோடு பொருளாதார தடைகளை தான் ரஷ்யாவிற்கு பரிசாக கிடைத்துள்ளது. இந்த போர் ரஷ்யாவிற்கு தோல்வியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்யா அதிபரின் அடுத்த நிலைபாடு குறித்து அமெரிக்காவிற்கு சிஐஏ கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இந்த விவாகரம் தொடர்பாக சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அளித்துள்ள எச்சரிக்கையில்.ரஷ்யா தற்போது பின் வாங்கி விட்டதாக நினைக்ககூடாது உகரைன் முழுவதையும் கைபற்ற முடியவில்லை என கடும் கோபத்தில் உள்ளார் .
இதனால் ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுத்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது ஆகவே உலக நாடுகளுக்கே ஆபத்தாக முடியும் என எச்சரித்துள்ளார்