'' காலம் கடந்த நீதி '' மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் : கிரிஸ்டோபர் ஒரு உண்மை கதை ?
கேரளாவின் எர்ணா குளம் பகுதியில் கண்டிபான நேர்மையான காவல் அதிகரியாக பணியாற்றி வரும் கிரிஸ்டோபர் (மம்மூட்டி) இவர் தனது வழக்கினை கையாளும் போது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களை என்கவுண்டர் செய்து மக்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் நல்ல பெயர் எடுக்கின்றார்.
மக்கள் மனதில் ஹீரோவாக இருந்தாலும் கேரள காவல்துறையில் கிறிஸ்டோர் (மம்முட்டி) சட்டத்தை தன் கையில் எடுக்கும் ஒரு முரட்டுத்தனமான அதிகரியாக உள்ளார். ஒரு பெண்ணை 5 இளைஞர்கள் சேர்ந்து பாலியல் பலத்காரம் செய்ய பொதுமக்கள் முன்பு சுட்டு தள்ளுகின்றார் கிரிஸ்டோபர், இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை விசாரணை செய்ய சிறப்பு அதிகரியாக அமலா பால் வருகின்றார்.
இந்த நிலையில் கதையில் பெரும் தொழிலதிபராக உள்ள சீதாரம் திருமூர்த்தி (வினய்) தனது மனைவி தனது வளர்ச்சிக்கு எதிராக இருந்த காரணத்தால் அவரை படுகொலை செய்கின்றார்.
இதில் மம்முட்டியின் வளர்ப்பு மகள் ஆமினா(ஐஸ்வர்யா லஷ்மி) உள்ளே வர அவரையும் கொலை செய்கின்றார் திருமூர்த்தி அவரை கிரிஸ்டோபர் பலி வாங்கினாரா ? ஆமினாவுக்கு நியாயம் கிடைத்ததா ? என்பதே படத்தின் கதை இங்கு படத்தின் கதை
பாலியல் குற்றம் அதிகரிக்கின்றதா
கொலை , கொள்ளை சமபவத்தை முன் வைத்து நகர்கின்றது படத்தி கதையினை பார்க்கு முன்பு இங்கு சில விவரங்கள் முக்கியமானவை 2021 ஆன் ஆண்டு பிபிசி வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி 2021 -ல் 76,263 பெண்கள் கடத்தப்பட்டிருக்கின்றனர். இது 2016ஆம் ஆண்டு புள்ளிவிவரமான 66,544 என்ற எண்ணிக்கையை விட 14 % அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது
அதில் சில குற்றங்கள் கொலைகள், பணம் கேட்டு கடத்தப்படுதல் ஆகியவற்றோடு தொடர்புடையவை. பலர் பாலியல் தொழிலுக்காகவும், வீட்டு பணிகளுக்காகவும் கடத்தப்பட்டதாக அந்த தகவல் கூறுகின்றது
இது போன்ற வன்முறைகள் இந்தியாவில் மட்டும் நடப்பவை அல்ல அதே சமயம் உலக அளவில் மூன்றில் ஒரு பெண் பாலியல் ரீதியான வன்முறையை எதிர்கொள்வதாக கூறும் ஐநாவின் அறிக்கை இந்தியாவிலும் அதே நிலையே என்று குறிப்பிடுகிறது
. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக வீடுகளில் நடக்கும் வன்முறையில் அவர்களுக்கு வழங்கப்படும் நீதியில் இன்றும் பேரமைதி நிலவுகிறது.
இது போன்ற பாலியல் குற்றங்களின் சம்பவங்களின் நிகழ்வுகளை வைத்து படத்தின் கதை நகர்ந்தாலும் , படத்தின் காட்சி அமைப்பில் பாலியல் வன்கொடுமை குறித்த படம் என்பதை ஒரு ரேப் சீனில் மட்டும் காண்பித்தால் போதுமானதாக இருக்கும். ஆனால் படம் பார்ப்பவர்களின் மனதை கலங்க வைக்க வேண்டும் என்ற நோகக்த்தோடு, கிட்டத்தட்ட இரண்டு மூன்று பாலியல் வன்கொடுமை காட்சிகள் ரியாலாக இருப்பது போல் காண்பித்தை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.
படத்தின் இரண்டாம் பாதி எளிதில் ஊகிக்கும் வகையில் நகர்கின்றது அதே சமயம் படத்தில் ஆமினாவாக வந்த ஐஸ்வர்ய லக்ஷமி, சிறப்பு தோற்றத்தில் வெற்றிவேலாக வந்த சரத்குமார்,வடிவுக்கரசியா வந்து தனது துப்பாகியால் மிரட்டும் (ஏஜண்ட் டீனா)நடிகை வசந்தி எல்லாவற்றையும் விட மெயின் வில்லனாக மிரட்டும் திரு மூர்த்தி (வினய்) ரசிகர்களுக்கு கதையில் தொய்வு வரும் போது எனர்ஜி டானிக்காக வருகின்றனர், குறிப்பாக சினேகா மற்றும் அமலா பால் தங்கள் வேடங்களை கச்சிதமாக அசத்தியுள்ளார்.
ஒட்டு மொத்தமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையினை தட்டி கேட்கும் கிறிஸ்டோபர் முதல் பாதியில் அசத்தினாலும், இரண்டாம் பாதியில் வழக்கமான சினிமா பாணியை தருகின்றது (அரைத்த மாவே) அதே சமயம் JUSTICE DELAYED JUSTICE DENINED என்ற கிரிஸ்டோபரின் வார்த்தைக்கு கைதட்டல் பறக்கின்றது அதே சமயம் படத்தின் இறுதிக் காட்சியில் சில திருப்பங்களை கொடுத்திருந்தால் கிறிஸ்டோபர் இன்னும் கொஞ்சம் மிரட்டியிருப்பார்.
பாலியல் வன்முறையில் ஒரு பெண் உயிரிழந்தால்தான் அந்த செய்தி பெரிதாகப் பேசப்படுகிறது. உயிருடன் இருக்கும் ஒரு பெண் பாதிக்கப்படும்போது அப்படி நடப்பதில்லை. மாறாக, அந்த பெண் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறாள், புள்ளிம்விவரங்களின் படி இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தெரிவித்துள்ளது இது போன்ற குற்றங்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பதை நேரடியாக சொல்லியிருக்கிறது கிறிஸ்டோபர்.