அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தது போல் உணர்கிறேன் - நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சி!

Uttar Pradesh India Ayodhya Ayodhya Ram Mandir
By Jiyath Jan 22, 2024 09:58 AM GMT
Report

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்வைக் காண நாங்கள் மிகவும் பாக்கியம் செய்துள்ளோம் என்று நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி 

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தது போல் உணர்கிறேன் - நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சி! | Chiranjeevi Speech Goes Viral Ram Temple

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த விழாவில், திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரண் மற்றும் மனைவியுடன் அயோத்திக்கு வந்தார்.

பாக்கியம் செய்துள்ளோம்

அப்போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம். இதை ஒரு அரிய தருணமாக நாங்கள் பார்க்கிறோம்.

அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தது போல் உணர்கிறேன் - நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சி! | Chiranjeevi Speech Goes Viral Ram Temple

என்னுடைய இஷ்ட தெய்வமான அனுமாரே என்னை நேரில் வந்து இந்த விழாவுக்கு அழைத்ததைப் போல உணர்கிறேன். இந்த பிரதிஷ்டை நிகழ்வைக் காண நாங்கள் மிகவும் பாக்கியம் செய்துள்ளோம்" என்றார்.