பிரபல நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் தூத்துக்குடி மாவட்ட சப்-கலெக்டராக நியமனம்.!
Son
Thoothukudi
Chinni Jayanth
Sub Collector
By Thahir
பிரபல நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் துாத்துக்குடி மாவட்ட சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது ரேங்க் பெற்றார்.
தற்போது அவர் தூத்துக்குடி மாவட்ட சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது தந்தை சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சினிமா நடிகரின் மகன் என்றால் சினிமாவில் தான் நடிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. தன் மகனுக்கு சினிமாவில் ஆர்வமில்லை படிப்பில் தான் ஆர்வம் என்பதனை புரிந்துகொண்டு அவரை ஊக்கப்படுத்தியதால்
தான் இன்று ஒரு நடிகரின் மகன் கலெக்டர் ஆக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.