மீண்டும் ‘Me too’ புகாரை பதிவிட்ட சின்மயி… - யார் அந்த நபர்? - ஷாக்கான ரசிகர்கள்

By Nandhini Jun 07, 2022 12:59 PM GMT
Report

பிரபல பின்னணி பாடகியான சின்மயி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட இருந்த ஓஎன்வி விருதை கேரளாவின் வுமன் சினிமா கலெக்ட்டிவ் அமைப்பினர் எதிர்த்தார்கள். நடிகைகள் பார்வதி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால், விருது மறுபரிசீலனை செய்யப்படும் ஓஎன்வி அகாடமி அறிவித்தது. தராத விருதை திருப்பி தருகிறேன் என்றும், தராத பணத்தையும் திருப்பி கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தருவதாக கூறினார் வைரமுத்து. இதற்கு கமெண்ட் செய்து வைரமுத்துவை தொடர்ந்து எதிர்த்து வந்தார் பாடகி சின்மயி.

மீண்டும் ‘Me too’ புகாரை பதிவிட்ட சின்மயி… - யார் அந்த நபர்? - ஷாக்கான ரசிகர்கள் | Chinmayi Me Too

பாலியல் குற்றச்சாட்டு

எனக்காக மட்டுமல்ல, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் குரல் கொடுத்து வருகிறேன். வைரமுத்து பாலியல் குற்றவாளி. அதனால், அவரை எப்போதும் நான் எதிர்த்துக்கொண்டே இருப்பேன். வைரமுத்து என்னிடம் மன்னிப்பு கேட்ட ஆடியோ ஆதாரம் உள்ளது. வைரமுத்து மற்ற பெண்களிடமும் இதுபோல் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், இதுவரை அவர் பொதுவெளியில் வெளிப்படையாக யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதான் எங்களுக்கு வேண்டும். வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் அவர் நிவாரணம் கொடுக்க வேண்டும்.

me too

‘mee too’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளை குறித்து கூற தொடங்கினர்.

மீண்டும் ‘Me too’ புகாரை பதிவிட்ட சின்மயி… - யார் அந்த நபர்? - ஷாக்கான ரசிகர்கள் | Chinmayi Me Too

சின்மயி பதிவு

இந்நிலையில், தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடக இசைக் கலைஞர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி குறித்து சின்மயி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

தன்னிடம் இசை கற்றுக்கொள்ள வந்த மாணவி ஒருவரை கர்நாடக இசை கற்பிக்கும் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவியும் அவரின் பெற்றோரும் தயவுசெய்து இதை இப்போது பகிர வேண்டாம் என்று சொல்கிறார்கள். குழந்தைகளை இதுபோன்ற வகுப்புக்கு அனுப்பும் போது பெற்றோர்கள் பாதுகாப்பாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த கர்நாடக இசைக்கலைஞர் யார்? என்று கூறவில்லை. தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.