பிள்ளைகளால் மனவேதனை - ரூ.23 கோடி சொத்தை நாய், பூனைக்கு எழுதி வைத்த மூதாட்டி!
மூதாட்டி ஒருவர் தனது சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.
மூதாட்டி
சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ என்ற மூதாட்டி. இவர் தன்னுடைய ரூ.23 கோடி மதிப்புள்ள சொத்துகளை தனது 3 பிள்ளைகளுக்கும் உயில் எழுதி வைத்தார்.
ஆனால் அந்த மூதாட்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது 3 பிள்ளைகளும் வந்து பார்க்கவில்லை என்பதால் லியூ அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார்.
வளர்ப்பு பிராணிகளுக்கு..
இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது உயிலை மாற்றி சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த அவரது 3 பிள்ளைகளும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க சட்டத்தில் இடமில்லை.
இதனால் கால்நடை மருத்துவ மனையை துவக்கி, நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாகி வருகிறது.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
