வானில் பறந்த சீன உளவு பலூன் ;இந்தியா, ஜப்பானையும் குறி வைத்தது - வெளியான அதிர்ச்சி தகவல்…!
அமெரிக்க வானில் பறந்த சீன உளவு பலூன், இந்தியா, ஜப்பானையும் குறி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏவுகணை ஏவுதளத்தில் மீது பறந்த சீன உளவு பலூன்
அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள அணு ஏவுகணை ஏவுதளத்தில் மிகப்பெரிய சீன உளவு பலூன் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தரையில் எந்த இழப்பும் ஏற்படாமல் தவிர்க்க அமெரிக்க அதிகாரிகள் அதை அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும்போது சுட்டு வீழ்த்த முடிவு செய்தனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன்
இதற்கிடையில், சீனா தனது எல்லையில் பறந்த பலூனுக்கு கோஸ்டாரிகாவிடம் மன்னிப்பு கேட்டது. பலூன் விமானப் பாதை அதன் அசல் திட்டத்திலிருந்து விலகியதாக சீன அதிகாரிகளால் கோஸ்டாரிகா அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமையன்று தென் கரோலினா கடற்கரையில் அமெரிக்க இராணுவ போர் விமானம் பலூனை சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க போர் விமானமான எஃப்-22 ராப்டரால் ஏவப்பட்ட ஏவுகணையால் அது சுட்டு வீழ்த்தப்பட்டது.
உளவு பலூன் குப்பைகளை தர மாட்டோம்
இதனையடுத்து, அமெரிக்கா பலூனை சுட்டு வீழ்த்தியது வாஷிங்டனுடனான தனது உறவை சேதப்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்தது.
இந்நிலையில், சீன உளவு பலூன் கடலில் போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதை மீட்க அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், உளவு பலூனின் எச்சங்களை சீனாவிடம் திருப்பித் தரும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை என்று வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
இந்தியா, ஜப்பானை குறி வைத்த சீன உளவு
பலூன் கடந்த திங்கட்கிழமை வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் வெண்டி ஷெர்மன், வாஷிங்டனில் உள்ள சுமார் 40 தூதரகங்களின் அதிகாரிகளிடம் இது குறித்து பேசினார்.
"சீனாவின் தெற்கு கடற்கரையில் ஹைனான் மாகாணத்திற்கு வெளியே பல ஆண்டுகளாக இயங்கி வரும் கண்காணிப்பு பலூன் முயற்சி, ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சீனாவின் வளர்ந்து வரும் மூலோபாய ஆர்வமுள்ள நாடுகளில் உள்ள இராணுவ சொத்துக்கள் பற்றிய தகவல்களை சேகரித்திருக்கிறது.
தி வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின்படி, பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள், PLA (மக்கள் விடுதலை இராணுவம்) விமானப்படையால் இயக்கப்படும் இந்த கண்காணிப்பு விமானக் கப்பல்கள் ஐந்து கண்டங்களில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் ஹவாய், புளோரிடா, டெக்சாஸ் மற்றும் குவாம் ஆகிய இடங்களில் குறைந்தது 4 பலூன்கள் காணப்பட்டன. சீனாவிலிருநது மற்றொரு உளவு பலூன் ஒரு வாரத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று அமெரிக்க செய்தி நிறுவனமான தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது.