அமெரிக்காவிற்கு சீனா அனுப்பிய சீக்ரெட் வைரஸ் - வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்கா மீது சீனா பயோ வார் தொடுக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பயோ வார்?
சீனாவைச் சேர்ந்தவர்கள் யுன்கிங் ஜியான் (33), ஜூன்யோங் லிபு(34). இதில் ஜுன்யோங் லிபு, சீன பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவர் நோய்க்கிருமிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
எனவே இவர்கள் பிரபல பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா வந்தனர். அப்போது ரகசிய தகவலின் படி, எப்.பி.ஐ. அதிகாரிகள் சுங்கத்துறையினருடன் இணைந்து விமான நிலையம் வந்த லியுவிடம் சோதனை நடத்தினர்.
ஆபத்தான நோய்க்கிருமி
அதில் ஆபத்தான நோய்க்கிருமியை லியு அமெரிக்காவுக்கு கடத்தி வந்ததாகவும் இந்த நோய்க்கிருமி 'வேளாண் பயங்கரவாத ஆயுதம்' என்று கூறப்படும் ஒரு பூஞ்சை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பூஞ்சை பயிர்களில் ஏற்படுத்தும் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான பெரிய அளவிலான பொருளாதார இழப்புகளுக்கு காரணமாகிறது.
புசேரியம் கிராமினேரம் எனப்படும் இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றில் ஒரு நோயை ஏற்படுத்தும். இது உணவில் கலந்தால் பயிர்களை அழித்து, மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி,
கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்கக் குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், லியு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விசாரணையில் அவரது காதலியின் ஆராய்ச்சிக்காக கொண்டு வந்ததாக தெரியவந்ததை அடுத்து யுன்கிங் ஜியானும் கைது செய்யப்பட்டுள்ளார்.