எலியின் கழுத்தை கடித்து பழிவாங்கிய மாணவி - ஆத்திரத்தில் வெறிச்செயல்!
கல்லூரி மாணவி எலியை கடித்து பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடித்த எலி
சீனா, வூசிச் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, அங்குள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் விடுதியில் இருந்த அந்த மாணவியின் விரலை எலி ஒன்று கடித்துள்ளது.
இதனால் வழி தாங்க முடியாமல் துடித்த மாணவி எலியைப் பழிக்குப் பழி வாங்க நினைத்துள்ளார். மேலும், அந்த எலியைப் பிடித்து அதன் கழுத்தைக் கடித்து தனது கோபத்தைத் தீர்த்துக் கொண்டார். இதனால் அந்த எலி உயிரிழந்தது.
பழிவாங்கிய மாணவி
இதனைத் தொடர்ந்து, எலி கடித்ததில் காயமடைந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது, அந்த மாணவி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.