வெறிநாய் தொல்லை; துப்பாக்கி ஏந்தியவரின் பாதுகாப்போடு பள்ளி செல்லும் குழந்தைகள்

Viral Video Kerala
By Thahir Sep 17, 2022 10:00 AM GMT
Report

கேரளாவில் வெறிநாய் தொல்லை அதிகரித்துள்ளதால் பள்ளி செல்லும் குழந்தைகளை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் ஒருவரின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

வெறிநாய் தொல்லை - 21 பேர் பலி 

கேரளாவில் கடந்த சில மாதங்களாக வெறிநாய் தொல்லை என்பது அதிகரித்துள்ளது.அண்மையில் 19 வயது கல்லுாரி மாணவி மற்றும் 12 வயது பள்ளி சிறுமி ஆகியோர் வெறிநாய் கடித்து உயரிழந்தனர்.

இந்த ஆண்டில் வெறி நாய் கடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. இதனால் தெருக்களில் விளையாடவோ, பள்ளி செல்லவோ குழந்தைகள் கடும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

வெறிநாய் தொல்லை; துப்பாக்கி ஏந்தியவரின் பாதுகாப்போடு பள்ளி செல்லும் குழந்தைகள் | Children Going To School With Gun Protection

இதனிடையே காசர்கோடு பகுதியில் சமீர் என்பவர் கையில் துப்பாக்கி ஏந்தியபடி குழந்தைகளை மதரஸா பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

இது குறித்து பேசிய சமீர், எங்கள் பகுதியில் தெருநாய்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு அஞ்சுகிறார்கள்.எனவே ஏர் கன்னுடன் அவர்களை அழைத்துச் செல்கிறேன்.சட்டரீதியான நடவடிக்கை குறித்து எனக்கு பயமில்லை என்று தெரிவித்துள்ளார்.