வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை... கதறிய தாய் - 19 நாட்களுக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசயம்
டெல்லியில் வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை சோப்பு தண்ணீரில் முழ்கிய நிலையில் மூச்சு பேச்சு இன்றி 19 நாட்களாக சிகிச்சையில் இருந்த குழந்தை உயிர் பிழைத்துள்ளது.
வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை
குழந்தையின் தாய் வீட்டில் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்துக் கொண்டு இருந்துள்ளார். பின்னர் அவரின் குழந்தை வாஷிங் மெஷின் அருகே தாய் இல்லாத போது சேரில் ஏறி வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது.
15 நிமிடங்கள் சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் முழ்கி கிடந்த குழந்தையை கண்டுபிடித்த தாய் உடனடியாக மருத்துமனையில் குழுந்தையை அனுமதிக்க கொண்டு சென்றார்.
அப்போது செல்லும் வழியில் குழந்தை சுயநினைவின்றி, பேச முடியாத நிலையில் மூச்சு திணறல் போன்ற சிரமங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு தாய் கதறி அழுதுள்ளார்.
19 நாட்களுக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசயம்
பின்னர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருந்து வந்தது.
பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட குழந்தையானது தனது தாயின் குரலை உணர்ந்து மீண்டும் பேசியது அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
பின்னர் மருத்துவர்கள் 19வது நாளில் குழந்தை உயிர் பிழைத்ததாக கூறி மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.