ஆண்டி... என்ற ஒத்த வார்த்தையால் கடும் கோபமான நடிகை நயன்தாரா..!

Nayanthara Vignesh Shivan Marriage
By Thahir Jul 25, 2022 07:02 AM GMT
Report

நயன்தாராவுக்கு திருமணம் நடைபெற்ற முடிந்த நிலையில் தன் தாய் வீட்டுக்கு சென்ற போது சிறுவன் ஆண்டி என்று அழைத்தால் கடும் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

நயன்தாரா எண்ட்ரீ

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இத்திரைப்படத்தை அடுத்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதல், வல்லவன், பில்லா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Nayanthara

இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

திருமணம்

கடந்த 2015 ம் ஆண்டு நானும் ரவுடி தான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனும்,நடிககை நயன்தாரவும் இணைந்து பணியாற்றியதில இருந்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

Nayanthara Marriage

இதையடுத்து 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த ஜுன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து திருமணத்தில் நயன்தாராவின் பெற்றோர் உடலநலக்குறைவால் கலந்து கொள்ளாத நிலையில் தனது பெற்றோரிடம் ஆசி வாங்க தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றனர்.

சிறுவனின் அழைப்பால் கோபமான நயன்தாரா 

அங்கு தனது பெற்றோரிடம் ஆசி பெற்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கேரளாவில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்தனர்.பின் நயன்தாராவை காண அவரது தாய் வீட்டிற்கு அவரது தோழி ஒருவர் வந்துள்ளார்.

Nayanthara

அப்போது தனது மகனுடன் வந்த தோழி நயன்தாராவுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது தோழியிடம் நயன்தாரா பேசிக்கொண்டிருந்த போது தோழியின் மகன் நயன்தாராவை அடிக்கடி ஆண்டி...ஆண்டி..என்று அழைத்துள்ளார். 

இதனால் கடும் கோபமான நயன்தாரா தம்பி என்னை நீ அக்கா என்றே கூப்பிடு ஆண்டி என்று சொல்லாத என அறிவுரை வழங்கியுள்ளார்.

திரைப்படங்களில் பிசியான நயன்தாரா

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது திரைப்படங்களில் பிசியாக இருந்து வருகின்றனர்.விக்னேஷ் சிவன் அண்மையில் தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர பாடல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதையடுத்து அந்த வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.நயன்தாரா தற்போது ஜவான் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.