6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது

arrest police child abuse
By Praveen May 09, 2021 06:11 PM GMT
Report

 விருத்தாசலம் அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது காம கொடூரன் கைது செய்யப்பட்டான்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கிளி மங்கலத்தைச் சேர்ந்த 30 வயது கூலித் தொழிலாளிக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்று  அவரது வீட்டிற்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது கிளிமங்கலம்  பகுதியை சேர்ந்த பட்டுசாமி மகன் ஜோதிவேல் 30 என்பவர் அப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தை வீதியில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

அக்கம் பக்கத்தில் பார்த்த போது யாரும் இல்லாததால் அந்த குழந்தையை ஜோதிவேல் அருகில் உள்ள கரும்பு வயலுக்கு கடத்திச் சென்று அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இது குறித்து அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜோதி வேலை பிடித்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுபோல் காமக்கொடூரன் அதிகபட்ச தண்டனை விரைவில் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.