பார்த்ததும் கதறியழுத மூதாட்டி - ஆறுதல் படுத்த முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்!

M. K. Stalin Smt M. K. Kanimozhi Thoothukudi
By Swetha Mar 26, 2024 06:30 AM GMT
Report

பணத்தை தொலைத்து விட்டேன் என மூதாட்டி முதல்வர் ஸ்டாலினிடம் கதறியழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.

பார்த்ததும் கதறியழுத மூதாட்டி - ஆறுதல் படுத்த முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்! | Chief Minister Stalin Consoled The Old Woman

எந்த ஊரில் அவர் தாக்கியிருந்தாலும் காலையில் நடைபயிற்சிக்கு சென்று அப்பகுதி மக்களை சந்திப்பது அவரது வழக்கமாகும். அதன்படி, தூத்துக்குடி தங்கிய அவர் காலை நடைபயிற்சிக்கு செல்லும் வழியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தவாறு சென்றார்.

தமிழ்நாட்டில் உள்ள இந்த நகரம் இரண்டு உலகப்போரிலும் தாக்கப்பட்டதா? அதன் விளைவு என்ன?

தமிழ்நாட்டில் உள்ள இந்த நகரம் இரண்டு உலகப்போரிலும் தாக்கப்பட்டதா? அதன் விளைவு என்ன?

ஆறுதல் படுத்தினார்

இந்நிலையில், அங்கிருந்த காய்கறிச் சந்தைக்குள் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பார்த்ததும் கதறியழுத மூதாட்டி - ஆறுதல் படுத்த முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்! | Chief Minister Stalin Consoled The Old Woman

அப்போது திடீரென முதல்வரிடம் ஓடிவந்த மூதாட்டி ஒருவர், தான் காய்கறி வாங்குவதற்காக 1,500 ரூபாய் பணத்தை வைத்திருந்ததாகவும்,அதை எங்கேயோ தொலைத்துவிட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

அதனை பார்த்ததும் முதல்வர் மற்றும் அருகிலிருந்த கனிமொழி என இருவரும் கதறியழுத மூதாட்டியை ஆறுதல்படுத்தினார்.  பின்னர், திமுக சார்பில் அவருக்கு 2,000 ரூபாய் பணம் உடனடியாக வழங்கப்பட்டது. அதற்கு மூதாட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார்.