எதிர்கட்சி தலைவர்கள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பீகார் பயணம்..!
ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ள எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாருக்கு நாளை செல்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் பயணம்
நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. பாஜகவைத் தோற்கடிக்க வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதற்காக பீகார் மாநிலம், பாட்னாவில் நாளை மறுநாள்( ஜூன் 23) எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாருக்கு நாளை செல்கிறார்.
பாட்னாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.