மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
Vijay
By Fathima
Mettur Dam Opening Today: மேட்டூர் அணையிலிருந்து இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீரை திறந்துவிடுகிறார்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வரும் முதலமைச்சர் சாலை மார்க்கமாக மேட்டூருக்கு நண்பகல் 12 மணிக்கு சென்றடைகிறார்.

இவரது வருகையை தொடர்ந்து மேட்டூர் அணைப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து மேட்டூர் அணை குறித்த விளக்கப்புகைப்பட கண்காட்சியையும், மேட்டூர் அணை மின்நிலையத்தையும் பார்வையிடுகிறார், அங்கிருந்து சேலம் விமான நிலையம் சென்று சென்னை திரும்புகிறார்.
