துபாய் தீ விபத்தில் தமிழர்கள் பலி - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

M K Stalin Tamil nadu Dubai Death
By Sumathi Apr 17, 2023 06:16 AM GMT
Report

தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து

துபாயின் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

துபாய் தீ விபத்தில் தமிழர்கள் பலி - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் | Chief Minister Condolences Families Of Tamil Dubai

இந்த விபத்தில் 16 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. தமிழகத்தை சேர்ந்த 2 ஆண்கள், கேரளாவை சேர்ந்த தம்பதி ஆகியோர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

நிவாரணம்

தமிழ்நாட்டை சேர்ந்த இமாம் காசிம், முகம்மது ரஃபீக் ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் துபாய் குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், அவர்களின் உடலை விரைவாக தமிழ்நாடு கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.