விராட் கோலியின் கேப்டன் பொறுப்பிலிருந்து இவர்கள்தான் பறித்தார்கள்... - சேத்தன் சர்மா திடுக்கிடும் தகவல்..!

Cricket Board of Control for Cricket in India
By Nandhini Feb 15, 2023 09:25 AM GMT
Report

விராட் கோலியின் கேப்டன் பொறுப்பிலிருந்து இவர்கள்தான் பறித்தார்கள் என்று சேத்தன் சர்மா கூறிய தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர்கள் போலி ஊசிகளை போடுகிறார்கள்

ரோஜர் பின்னி தங்கியிருந்த இடத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசிய கேமரா வைத்து கண்காணித்தது. அப்போது, ஒரு நபரிடம் சேத்தன் ஷர்மா பல விவகாரங்கள் குறித்து பேசியது பதிவாகியுள்ளது. இதில், கங்குலி விராட் கோலி இடையே மோதல் ஏற்பட்டது குறித்து சேத்தன் ஷர்மா பேசி இருக்கிறார்.

மேலும், பிசிசிஐ தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா மீது நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனில், ஊக்கமருந்து உட்கொண்டதாகக் கூறப்படும் இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் பல ஊழல்களைப் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

சேத்தன் ஒரு ஸ்டிங் ஆபரேஷனில், இந்திய கிரிக்கெட்டில் பல வீரர்கள் உடல் தகுதி பெற ஊசி போடுவதாகக் கூறினார். இதுமட்டுமின்றி, இங்கு பெயர் குறிப்பிடப்படாத பெரிய நட்சத்திரங்களும் ஊசி போடுவதையும், கிரிக்கெட்டிற்கு வெளியே தங்களுடைய சொந்த மருத்துவர்களை வைத்திருப்பதையும் சேத்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், இந்திய கிரிக்கெட்டின் இயக்கத்தை மாற்றக்கூடிய பரபரப்பான ஸ்டிங் ஆபரேஷனில், வீரர்கள் "போலி ஊசி" போடுகிறார்கள் என்பது வாரியம் மற்றும் தேர்வாளர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் யார் என்று உறுதியாக தெரியவில்லை. சில நட்சத்திர வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இல்லாதபோதும் NCAலிருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.

போலி உடற்தகுதிக்கு ஊசி போடும் இந்த வீரர்கள் அனைவருக்கும் கிரிக்கெட்டுக்கு வெளியே தங்கள் சொந்த மருத்துவர்கள் உள்ளனர், இதனால் அவர்கள் முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக முழுமையாக தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் என்றார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

chetan-sharma-virat-kohli

விராட் கோலி கேப்டன் பொறுப்பு பறிப்பு

இந்நிலையில், இந்திய அணியின் தேர்வு குழுவினர் தான் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று முடிவு செய்தனர் என்று சேத்தன் சர்மா கூறிய தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.