செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - ஆளப்போறான் தமிழன் பாடல் ஒலிக்க வருகை தந்த முதலமைச்சர்!
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா அரங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதில் பிடே அமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பங்கேற்றுள்ளனர். டிஜிட்டல் திரையில், முன்னாள் தமிழக முதல்வர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது.
கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா. இந்தியாவிலேயே முதல்முறையாகத் தலைநகர் சென்னையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
நிறைவு விழா
வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான வீரர்கள் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்டனர். மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்- வீராங்கனைகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டனர்.
அதேபோல இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கின. இந்திய அணிகளில் குறைந்தது ஒரு அணியாவது பதக்கம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இதில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர். ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்தியா வெண்கல பதக்கத்தை வென்றது.
இதில் செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்க உள்ளார்.

Siragadikka Aasai: முத்துவிடம் கதறி அழும் பெண்... சீதாவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா? Manithan

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil
