செஸ் ஒலிம்பியாட் போட்டி - தொடர்ந்து 6-வது வெற்றியை பதிவு செய்த தமிழக வீரர் குகேஷ் - குவியும் பாராட்டு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில், தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழக வீரர் குகேஷ் தொடர் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து 6-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளார். அர்மீனிய வீரர் கேப்ரியலை 41-வது நகர்த்தலில் வீழ்த்தி, வெற்றி வாகை சூடியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில், தொடர்ந்து 6-வது வெற்றியை பதிவு செய்த தமிழக வீரர் குகேஷுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.