திடீர் தீ விபத்து - வீட்டில் இருந்த 3 பேர் தீப்பற்றி பலி! குடும்பமே உயிரிழந்த சோகம்!

chennai fire accident tiruvellikeni 3 death
By Anupriyamkumaresan Jul 20, 2021 09:58 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திடீர் தீ விபத்து - வீட்டில் இருந்த 3 பேர் தீப்பற்றி பலி! குடும்பமே உயிரிழந்த சோகம்! | Chennai Tiruvallikeni Fire Accident 3 Death

சென்னை திருவல்லிக்கேணி தேவராஜன் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 16-ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவர் அப்துல் ரஹீம், மனைவி பாத்திமா, மகன் நஹீத் என மூன்று பேரும் சிக்கி படுகாயமடைந்தனர்.

திடீர் தீ விபத்து - வீட்டில் இருந்த 3 பேர் தீப்பற்றி பலி! குடும்பமே உயிரிழந்த சோகம்! | Chennai Tiruvallikeni Fire Accident 3 Death

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திடீர் தீ விபத்து - வீட்டில் இருந்த 3 பேர் தீப்பற்றி பலி! குடும்பமே உயிரிழந்த சோகம்! | Chennai Tiruvallikeni Fire Accident 3 Death

இந்த நிலையில் இன்று ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விசாரணையில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது தீப்பற்றியதும் தெரியவந்தது.