அடுத்த தொடரில் ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடுவாரா..? சென்னை அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன?

Ravindra Jadeja TATA IPL IPL 2022
By Irumporai May 15, 2022 05:28 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஜடேஜாவின் பயணம் நிறைவடைந்துவிட்டதாக பரவி வரும் வதந்திக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு கோப்பைகளை வென்று கொடுத்த நம்பிக்கை நாயகனான தோனி, இந்த வருட தொடர் துவங்குவதற்கு முன்பாக திடீரென சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.

இதனால் சென்னை அணியின் கேப்டன் பதவி ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தோல்வியுடன் நடப்பு தொடரை துவங்கிய ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரின் துவக்கத்தில் அடுத்தடுத்து பல படுதோல்விகளை மட்டுமே சந்தித்தது.

ஜடேஜா தலைமையில் 8 போட்டிகளை எதிர்கொண்ட சென்னை அணி அதில் வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது, மற்ற போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல், பீல்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிக மிக மோசமாக செயல்பட்டது.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பீல்டர் என பெயரெடுத்த ஜடேஜாவும் இந்த தொடரில் மிக மோசமாக பீல்டிங் செய்தார். கேப்டன்சி மீதான அழுத்தமே ஜடேஜாவின் சொதப்பல் ஆட்டத்திற்கு காரணமாக பார்க்கப்பட்ட நிலையில்.

திடீரென ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகிகொண்டார், இதன்பின் சென்னை அணியின் கேப்டன் பதவி மீண்டும் தோனியிடமே ஒப்படைக்கப்பட்டது.

ஜடேஜாவை சென்னை அணி தான் வலுக்கட்டாயமாக கேப்டன் பதவியில் இருந்து விலக வைத்ததோடு, அணியில் இருந்தும் நீக்கியுள்ளது என்றே பலரும் பேசி வருகின்றனர்.

மைக்கல் வான் போன்ற முன்னாள் வீரர்கள் சிலர் சென்னை அணியுடனான ஜடேஜாவின் பயணம் நிறைவடைந்துவிட்டது, இனி சென்னை அணியில் ஜடேஜாவை பார்க்க முடியாது என தகவல்கள் வெளியான நிலையில்

சென்னை அணியின் நிலைப்பாடு குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரியாக காசி விஸ்வநாதன் கூறுகையில்: சிஎஸ்கேவின் வருங்காலத் திட்டங்களில் ஜடேஜா நிச்சயம் உள்ளதாகவும், காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் அறிவுரைப்படியே அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.