ஒரே இடத்தில் தொடரும் விபத்துகள் - என்ன நடந்தது?
சென்னை பெரம்பூர் சாலையில் இருக்கும் டிவைடரில் மோதி, ஒருவர் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூர் சாலையில் இருக்கும் இந்த டிவைடரால் இதுவரை எண்ணிலடங்கா விபத்துக்கள் நடந்துள்ளது. தற்போது அதே போன்று, அந்த சாலையில் வந்த ஒரு கார், டிவைடரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒருவர் தலையில் பலத்த காயமடைந்து மயங்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் விபத்துக்களை தவிர்ப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.