பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு - மேயர் அதிரடி அறிவிப்பு!
சென்னை பெருநகர மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைய இணைப்பு வழங்கப்படும் எனவும், மாணவ, மாணவியரிடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சென்னை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 72 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மாணவிகளுக்கு 23 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், பள்ளிகளை பராமரிப்பதற்காக 16 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.