சென்னையில் மழை - வடபழனியில் தேங்கி நின்ற மழை நீர்..சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!
கடந்த 2 நாட்களாக சென்னையில் தொடர் பெய்து வரும் மழையால், வடபழனியில் தேங்கி நிற்கும் நீரில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சிரமப்படும் வாகன ஓட்டிகள்
நேற்று முன்தினம் இரவிலிருந்து சென்னையில் பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் படுமோசமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வடபழனியில் தேங்கி நிற்கும் மழை நீரில் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
Vadapalani, Chennai this morning. Horrible. Just horrible. pic.twitter.com/XLKP3jT4ov
— MRV (@MRVChennai) November 2, 2022