மாமல்லபுரத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி : இந்திய வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆயுவு மையம் இன்று காலை தெரிவித்திருந்த தகவலின்படி, தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூரை ஒட்டி கரையைக் கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில்
தற்போது வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதி கனமழை - இன்று இரவில் இருந்து நாளை வரை பொது மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது
To all those who are wondering where are the #Rains in #Chennai, the system has bee consolidating slowly, bulk of rains are expected during the night. So it will never be a question of whether will #ChennaiRains happen but only a question of how heavy. #stayhome #staysafe #COMK
— Chennai Rains (COMK) (@ChennaiRains) November 10, 2021
வீட்டில் ஆதார், ரேஷன், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் அதிக மழை நீர் தேங்கி நிற்கும் 166 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன; வரும் காலங்களில் இந்த பிரச்னை சரி செய்யப்படும்; கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 400 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.