சென்னையில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு

Corona Positive Chennai Case
By Thahir Jan 09, 2022 03:50 PM GMT
Report

சென்னையில் கடந்த 4-ந்தேதியில் இருந்து தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு மேலாக பதிவாகி வரும் நிலையில், இன்று 6,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 3-ந்தேதியில் இருந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுவும் தினசரி பாதிப்பு சராசரியாக 2 ஆயிரம் என்ற வகையில் அதிகரித்து வருகிறது.

அதேபோல் சென்னையிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 3-ந்தேதி தினசரி பாதிப்பு 876 ஆக இருந்தது. அதன்பின் 4-ந்தேதி 1489 ஆக அதிகரித்து. 5-ந்தேதி 2481, 6-ந்தேதி 3759, 7-ந்தேதி 4531, நேற்று 5098 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் இன்று 6189 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 21.4 சதவீதம் அதிகமாகும். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1512 பேரும், திருவள்ளூரில் 702 பேரும், காஞ்சிபுரத்தில் 343 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.