நடுரோட்டில் தலை முடியை பிடித்து சண்டை போட்ட கல்லுாரி மாணவிகள்!
சென்னையில் தனியார் கல்லுாரி மாணவிகள் நடுரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டை போட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.
சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் கல்லுாரி மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக் கொண்டு நடுரோட்டில் சண்டையிட்ட சம்பவத்தை இளைஞர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்தனர்.
அப்போது சில மாணவிகள் இளைஞர்களை வீடியோ எடுக்க வேண்டாம் என்றும் சொன்ன போதும் இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
இரண்டு மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டையிட்டு கொண்டு தாக்கி கொண்டனர்.
அப்போது சக மாணவிகள் தடுக்க முயன்றும் மாணவிகள் விடாமல் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
மாணவிகள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் தாக்கி கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகளிடம் கல்லுாரி நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளார்.