கனமழையால் காற்று மாசு குறைந்தது - சகஜ நிலைக்கு திரும்பிய சென்னை
சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு முழுவதும் மழை பெய்து வருவதால், காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான புதன் கிழமை (நவ.03) காற்றின் தரக் குறியீடு (AQI) 48 ஆக இருந்தது, இது அக்டோபர் 28 அன்று பதிவு செய்யப்பட்ட AQI 120 க்கு முற்றிலும் மாறாக இருந்தது.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருந்ததால் பொதுமக்கள் அதிக அளவில் தங்கள் வாகனங்களில் பயணம் செய்ததால் காற்று மாசு சற்று உயரத் தொடங்கியது.
இந்நிலையில்,தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு மழை பெய்து வருவதால் மணலி, ஆலந்தூர், வேளச்சேரி, கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் AQI 50 க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது,இது மிகவும் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும்,அரும்பாக்கம் மற்றும் ராயபுரம் - 50-100 வரம்பில் ஓரளவு உயர் AQI அளவைப் பதிவு செய்துள்ளன, இது 'திருப்திகரமான' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காற்ற மாசு குறித்து பேசிய மூத்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் மழை மற்றும் பலத்த காற்றின் விளைவாக மாசு அளவு குறைந்துள்ளது என்றார்.
பெரும்பாலான நிலையங்களில் முதன்மையான மாசுபாடு PM2.5 அல்லது PM10 அல்ல." இதற்கிடையில், அடுத்த 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு தீபாவளி தினத்தை முன்னிட்டு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழையுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 29 டிகிரி செல்சியஸ் மற்றும் 25 டிகிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.