ரூ.1 கோடி நிவாரணம் - பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

Telangana Accident Death
By Sumathi Jul 03, 2025 07:12 AM GMT
Report

வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வெடி விபத்து

தெலங்​கானா, சங்​காரெட்டி மாவட்​டத்​தில் உள்ள சிகாச்சி ரசாயன தொழிற்​சாலை​யில் திடீரென பயங்கர வெடி​விபத்து ஏற்​பட்​டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 40 ஆக உயர்ந்​துள்​ளது.

telangana

தொடர்ந்து 33 பேர் காயத்​துடன் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். மேலும், பலர் காணா​மல் போயுள்​ளனர். இந்நிலையில், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி இறந்​தவர்​களின் குடும்​பத்​தாரை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்துள்ளார்.

சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை - குற்றவாளி மனோஜித் சைக்கோ என குற்றச்சாட்டு

சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை - குற்றவாளி மனோஜித் சைக்கோ என குற்றச்சாட்டு

ரூ.1 கோடி நிவாரணம்

இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்​கு​வ​தாக சிகாச்சி தொழிற்​சாலை செய​லா​ளர் விவேக் தெரி​வித்​துள்​ளார். இந்த விபத்து ரியாக்​டர் வெடித்​த​தால் இல்​லை. நாசவேலை கூட காரண​மாக இருக்​கலாம் எனவும் கூறியுள்ளார்.

ரூ.1 கோடி நிவாரணம் - பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு | Chemical Unit Blast Announces Rs 1 Crore Relief

இதனையடுத்து விபத்து குறித்து தலைமை ரசாயன நிபுணர் பிர​தாப் குமார் தலை​மை​யில் ஓய்வு பெற்ற ரசாயன நிபுணர் சூர்ய நாராயணா, பூனாவை சேர்ந்த பாது​காப்பு அதி​காரி சந்​தோஷ் கோகே ஆகிய 3 பேர் விசாரணைக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிகாச்சி ரசாயன நிறு​வனம் 3 மாதம் மூடப்​படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.