இறந்த மகளின் சடலத்தை 10 கிலோமீட்டர் தோளில் சுமந்துச்சென்ற தந்தை - விசாரணை நடத்த உத்தரவு

viralvideo mancarriesdeaddaughter chattishgarhman
By Swetha Subash Mar 26, 2022 07:08 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இறந்த தன் மகளின் சடலத்தை தந்தை ஒருவர் 10 கிலோமீட்டர் தோளில் சுமந்துச்சென்ற விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சத்திஷ்கர் மாநிலம், சுர்குஜா மாவட்டம் ஆம்தாலா கிராமத்தை சேர்ந்த ஈஷ்வர் தாஸ் என்ற நபர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது 7 வயது மகள் சுரேகாவை லகான்பூர் கிராமத்தில் உள்ள சமூக சுகாதார மருத்துவ மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு உடலிலுள்ள ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை(நேற்று) காலை மருத்துவ மையத்தில் உயிரிழந்துள்ளார்.

காலை 7.30 மணியளவில் சிறுமி உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் வருவதற்கு 9.20 மணி ஆகியுள்ளது.

ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் அதுவரை காத்திருக்காமல் ஈஷ்வர் தனது மகளை தோளில் சுமந்தவாரே 10 கிலோமீட்டர் எடுத்துசென்றுள்ளார்.

இறந்த மகளின் சடலத்தை 10 கிலோமீட்டர் தோளில் சுமந்துச்சென்ற தந்தை - விசாரணை நடத்த உத்தரவு | Chattisgarh Man Carries Dead Daughter On Shoulder

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவவே, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இந்த வீடியோ காட்சியைப் பார்த்தேன். கவலையாக இருந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.

மேலும், பணியமர்த்தப்பட்டும் பணியை செய்ய முடியாதவர்களை நீக்க வேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளேன்.” என தெரிவித்தார்.