இன்று விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3 : இறுதிகட்டத்தில் எரிபொருள் நிரப்பும் பணி

Indian Space Research Organisation
By Thahir Jul 14, 2023 05:31 AM GMT
Report

சந்திராயன் - 3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்3 எம்-4 ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன.

இறுதி கட்டத்தை எட்டிய எரிபொருள் நிரப்பும் பணி 

இதன் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.

Chandrayaan 3 is flying in the sky today

பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. 

விண்ணில் பாய்கிறது

ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 1/2 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்டவுன் முடிந்தவுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, இன்று மதியம் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான 'சந்திரயான்-3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.