ஆட்சியை பிடித்தால் தாய்மார்களுக்கு ரூ.15000 வழங்கப்படும் - சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி!

Andhra Pradesh Election
By Vinothini May 29, 2023 02:53 PM GMT
Report

 தேர்தலை முன்னிட்டு எதிர் கட்சி தலைவர் வாக்குறுதிகளை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சி

ஆந்திரா மாநிலம், ராஜமகேந்திரவரம், வேமகிரியில் என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழா நடந்தது. அதில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.

chandrababu-naidu-announced-election-promises

அதில் அவர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மகாசக்தி திட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பிய இளம்பெண்கள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 டெபாசிட் செய்யப்படும். பெண்களுக்கு 59 வயது வரை உதவித் தொகை வழங்கப்படும்.

தள்ளி வந்தனம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குழந்தையின் கல்விக்காகவும் தாய்மார்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.15,000 டெபாசிட் செய்யப்படும்" என்று கூறினார்.

வாக்குறுதிகள்

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, தீபம் திட்டத்திற்கு கீழ் வீட்டிற்கும் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள்.

chandrababu-naidu-announced-election-promises

விவசாயிகளின் துயரை நீக்க அன்னதான திட்டத்தின் கீழ் ரூ.20,000 நிதியுதவி வழங்கப்படும். தொடர்ந்து, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க ரக்ஷனா கோசம் என்ற கடுமையான சட்டம் வகுக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு 2 குழந்தைகள் என்ற விதிமுறை ரத்து செய்யப்படும். மக்களிடம் கருத்துகளைப் பெற்ற பிறகு தேர்தல் அறிக்கையின் 2-ம் பாகம் தசரா பண்டிகையின் போது வெளியிடப்படும்.

தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்ததும் இந்த தேர்தல் அறிக்கை முழுவதும் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன். வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

என்னை நம்புங்கள், நான் ஆந்திராவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை தருவேன்" என்று கூறியுள்ளார்.