கணவர் மீது முன்னாள் அமைச்சர் 'சந்திர பிரியங்கா' டி.ஜி.பியிடம் பரபரப்பு புகார்!

India Puducherry
By Jiyath Nov 07, 2023 02:46 AM GMT
Report

புதுச்சேரி மாநில முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

எம்எல்ஏ சந்திர பிரியங்கா

புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வந்த சந்திர பிரியங்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தால் முதல்வர் ரங்கசாமி அவரை நீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

கணவர் மீது முன்னாள் அமைச்சர்

ஆனால் சந்திர பிரியங்கா எம்எல்ஏவாக தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 6 மாதமாக தனது கணவர் சண்முகத்தை பிரிந்து வாழும் சந்திர பிரியங்கா, டி.ஜி.பி ஸ்ரீனிவாசை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கணவர் மீது புகார்

அதில் "தனது கணவர் சண்முகம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தொடர்ந்து அவதூறு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திர பிரியங்கா வாய்மொழியாக புகார் அளித்துள்ளார்.

கணவர் மீது முன்னாள் அமைச்சர்

இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு, காரைக்கால் சீனியர் எஸ்.பி. கவுகால் நிதின் ரமேஷுக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, குடும்ப பிரச்சனை காரணமாகவே சந்திர பிரியங்கா தன் மீது பொய் புகாரை அளித்துள்ளதாக கணவர் சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.